⏰இன்றைய சிந்தனை..( 18.08.2018..)..
.............................................
‘’காலத்தைப் பயன்படுத்துங்கள்..’’
.............................................
"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே.
காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொது..
கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.
உங்கள் நேரம் உங்களுக்காகவே.அதை மற்றவர்க்காக இழக்காதீா்கள்.உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்..
எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல.
வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள்
சீக்கிரமே நின்று போகுமா? அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமா? என்பதை யாரும் கூற இயலாது.
தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்.
அன்பு செலுத்துங்கள்.உழைத்து கொண்டிருங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காாியத்தையும் திட்டமிடுங்கள்.ஒரு குறிப்பிட்ட வேலையைஇவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.
நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும்.கால விரயத்தைத் தடுக்கலாம்.
ஆம்.,நண்பர்களே..,
காலத்தைச் சாியாகப் பயன்படுத்த தொிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டு இருக்கிறீா்கள் என்று நம்பலாம்.🌷🙏🏻💐
No comments:
Post a Comment