Tuesday, August 24, 2021

*அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எதுவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது?*

இதோ சில அதிர்ச்சித் தகவல்கள்.!!!


■ NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

■ FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.

PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!



🌷🌷

Monday, August 23, 2021

*பூணூல்*

இந்துக்களின் மாத கணக்கு நிலவினை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்த பவுர்ணமி ஆவணிமாத பவுர்ணமியாகின்றது


ஒவ்வொரு பவுர்ணமியும் இந்துக்களுக்கு சிறப்பானது சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அவர்களுக்கு சிறப்பு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு

அப்படி இன்று ஆவணி பவுர்ணமியும் அவிட்டமும் சேரும் நாள் ஆவணி அவிட்டம் எனும் பண்டிகையாயிற்று

ஆவணி அவிட்டம் அன்று பூனூல் சடங்கு விஷேஷம், அதற்கு முன் பூனூல் என்றால் என்னவென்று முதலில் விளங்கி கொள்ள வேண்டும், அதுபற்றிய அடிப்படை அறிவே பலருக்கும் இல்லை.

பூ+நூல் பூனூல் ஆயிற்று, பூ என்றால் என்ன வெறும் மலர் மட்டுமா?

இன்றும் கிராமங்களில் விளைச்சலை பூ என்பார்களே ஏன்?

பூ என்றால் பக்குவமடைதல், பூ என்றால் விளைந்த‌ நிலை, பயன்பாட்டுக்கு வந்த நிலை, தகுதி பெற்றுவிட்ட நிலை.

இதனால்தான் மலர்ந்த மொட்டுக்களை மட்டுமல்ல, விளைந்த நெல் வயலும் பூ என்றே அழைப்பட்டது..

பெண் ருதுவாவது கூட பூ நிலையினை எட்டினாள் என சொல்லும் வகையில் பூப்படைந்தாள் என்றானது.

பக்குவமானதை குறிக்கின்ற சொல்லே பூ, அந்த பக்குவத்தினை குறிக்கும் அடையாளமே நூல், கலைகளில் அறிவில் சாஸ்திரத்தில் முதிர்ந்தோர் அணியும் நூல் பூ நூல் ஆயிற்று.

அந்நூலை அணிந்தால் அவர்கள் அவ்விஷயத்தில் தகுதிபெற்றவர்கள் என்ற அடையாளமும் ஆயிற்று..

அப்படி ஆவணி அவிட்டத்தில் கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் தர்ம நீதி நெறிகளுக்கும் தகுதியான போதனை செய்யும் நிலையினை எட்டியவர்களுக்கு பூனூல் அணிவிக்கபட்டது.

அது பெரும் பண்டிகை, ஒரு காலத்தில் தேசம் முழுக்க , தமிழகம் முழுக்க கொண்டாடபட்ட பண்டிகை என்றாலும் இன்று பிராமணருக்கான நாள் என குறுகிய வட்டத்தில் சென்றாயிற்று அல்லது அப்படி மற்ற இனம் அந்த நாளை கைவிட்டது.

அன்று ஆவணி மாத அவிட்ட நட்சத்திர பவுர்ணமியானதை கலைகளுக்கான தொடக்க நாளாக குறித்தார்கள்

பிராமணர் இந்நாளில் பூணூலை புதுப்பிப்பது, முன்னோர்களையும் அவர்கள் கற்று தந்த வேதங்களையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவது, வேதம் கற்க கற்பிக்க தொடங்குவது என சகலமும் இந்நாளில்தான் நடைபெறும்

இந்த பூணூல் திருமணம், சடங்கு சங்கதிகள் எல்லாம் இந்நாளில்தான் நடக்கும்

உபநயன‌ம் எனப்படும் உறுதிமொழியும் சில மந்திரங்களும் போதிக்கபடும், மந்திரம் என்பது பொதுவாக காயத்திரி மந்திரம் என்றாலும் இன்னும் பல உறுதிமொழிகளும் மந்திரங்களும் உண்டு

உபநயணம் என்பது வேறொன்றுமில்லை, நயனம் என்றால் கண் என பொருள். புற கண்களை தாண்டி அகக்கணுக்கு தேவையான பார்வையினை கொடுக்கும் விளக்கம் என் பொருள், அதுவே உபநயணம் ஆயிற்று

இந்நாள் உண்மையில் பிராமணருக்குரிய நாளா என்றால் இல்லை என்பதுதான் உண்மை, பூனூல் என்றால் பிராமணருக்கு உரியது மட்டும் எனும் தவறான கருத்தில் சொல்லபடும் விஷயம் அது

பூணூல் என்பது பிராமணருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அக்காலத்தில் சான்றோர் அல்லது கலைகளில் வல்லவர்கள் என அறியபட்டவரின் இந்துக்கள் அடையாளமாய் இருந்தது.

காளிதாசன் பிராமணன் அல்ல அவன் பூனூல் அணிந்திருந்தான், கம்பன் கூட அணிந்திருந்தான் என்கின்றது அவன் வரலாறு, அவனும் பிராமணன் அல்ல.

நூல் என்பது புத்தகத்தை மட்டும் குறிப்பது அல்ல, அன்று கற்றறிந்த பண்டிதர்களையும் நூலோர் என்றே குறிப்பிட்டனர். "நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என வள்ளுவன் சும்மா சொல்லவில்லை.

சிவகாசி நாடார்களும் பூணூல் அணிவது மரபு, இன்னும் சில சாதிகளிலும் உண்டு

கலைஞர்கள் , கலை வித்தகர்கள், கலையின் உச்சத்தில் இருக்கும் அனுபவஸ்தர்கள், தொழில் சொல்லிகொடுக்கும் குருக்கள் எல்லாம் பூணூல் அணிந்திருந்தனர்

இதற்கான சான்று மகாபாரத்திலே உண்டு,

அறிவாளி ,வீரன், கற்றரிந்தவன், பெண்களில் மேலோர் எச்சாதியில் இருந்தாலும் அவன் மேல்குடியே என துரோணர் தனக்கு
சொன்னதை திரும்ப சொல்லி கர்ணனை தன்னோடு சேர்த்து கொள்கின்றான் துரியன்..

பூணூல் முதிர்ச்சியின் அடையாளமாக காட்டபட்டது, மேல் சட்டை அணியா இந்திய சமூகத்துக்கு ஒருவனை கண்டவுடன் அடையாளம் காணும் முறையாகவும் அது இருந்தது

பூணூல் பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதெல்லாம் அபத்தமான வாதம், அரசியல்

தச்சர், வியாபாரி, சிற்பி, பொற்கொல்லர் என சகலரும் பூணூல் அணிந்தனர். அதாவது ஒரு கலை அல்லது தொழில் செய்யும்பொழுது அதை முறைபடி கற்கும் பொழுது ஒரு நூல் அணிந்து அதற்கான வித்தைகளை படிப்பது அந்நாளைய வழக்கம்

எல்லா துறை மாணவர்களுக்கும் அது இருந்தது.

பிராமணர் வேத மந்திரங்களை படிப்பர், தச்சு வேலை செய்வோர் அதன் அரிச்சுவடியினை படிக்க தொடங்குவர், இன்னும் பல தொழில்களும் கலைகளும் செய்வோர் இந்நாளில் கலைகளை கற்க தொடங்குவர்

ஒவ்வொரு கலைக்கும் தொழிலுக்கும் இலக்கணம் உண்டு, உறுதிமொழி உண்டு. அந்த கலையும் தொழிலும் என்ன நோக்கத்திற்கானது என்பதை உணர செய்து அதை மனதாலும் உணர்வாலும் கலந்து செய்ய , ரசித்து, உணர்வோடு செய்ய செய்யபட்ட ஏற்பாடு அது

உணர்வாலும் உயிராலும் மனதாலும் கலந்து செய்யபடும் தொழிலும் கலையுமே நிலைக்குமே அன்றி, கடனே என கர்மபலனை தொலைக்க செய்யும் காரியம் நிலைக்காது

அதனால்தான் அக்கால கலைகள் எல்லாம் அழிவா வரம் பெற்று காவியம், ஆலயம், பாடல்கள் என இன்றுவரை நிலைத்து நிற்கின்றன‌

கலைகளை கற்க தொடங்கும் நாள் இது, எல்லா இனங்களும் ஒரு காலத்தில் கொண்டாடினர்

இன்று வேதம் படிக்கும் பிராமணர் மட்டும் அதை தொன்றுதொட்டு பாதுகாத்து வருகின்றார்களே தவிர மற்ற இனங்கள் அவற்றை விட்டுவிட்டன‌

விஞ்ஞானமும் இன்னும் பல வளர்ச்சியும் வந்துவிட்ட நிலையில் பல கலைத்தொழில்கள் இன்று தேவைபடா நிலையில் அவை மறைதாயிற்று

ஆனால் தேவை இருப்பினும் இல்லாவிடினும் வேதம் கற்க வேண்டும், பரம்பரை பரம்பரையாக அதை காத்து வரவேண்டும் என போராடும் பிராமண சமூகம் அந்த பாரம்பரியத்தை சுயதர்மமாக கருதி தொடர்ந்து வருகின்றது

அதனால் அது பிராமணருக்கு உரிய சடங்காக தெரிகின்றதே அன்றி வேறொன்றுமில்லை, உண்மையில் இந்நாள் எல்லா மக்களுக்கும் பொதுவானது.

தங்கள் சம்பிரதாயபடி ஆவணி அவிட்டத்தை பெருநாளாக கொண்டாடும் எல்லா இந்துக்களுக்கும் வாழ்த்துக்கள்

முன்னோர்கள் கற்றுகொடுத்த நற்பயிற்சிகளையும் முயற்சிகளையும் பயிற்சியாக பெறும் இந்நாளில் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துக்கள்

(இது பிராமணருக்கான விழா அதனால் பன்றிக்கு பூனூல் போடுவோம் என எந்த அறிவுகெட்டவனாவது தமிழர் கலாச்சாரமும் பண்பாடும் தெரியாதவனாவது கிளம்பினால் எருமை மாட்டை பிடித்து அதன் மேல் பகுத்தறிவு என எழுதி அதற்கு கருப்பு துண்டும் கட்டிவிடலாம்

பன்றிக்கு பூனூல் என கிளம்புவன் ஒருவனாவது பன்றிக்கு ஞானஸ்நானம் , பாஸ்டர் பட்டம் என கிளம்பட்டும் பார்க்கலாம்

அட குறைந்தபட்சம் பன்றிக்கு .... பதவி பட்டம் என்றாவது தொட்டுபார்க்கட்டும் பார்க்கலாம், செய்யவே மாட்டார்கள்)

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...