Sunday, September 1, 2024

திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்🛕

திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்🛕

1. வேங்கட மலை:

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். அவர்களில்,

1.த்ருவ ஸ்ரீநிவாசர்,

2. போக ஸ்ரீநிவாசர்,

3. கொலுவு ஸ்ரீநிவாசர்,

4. உக்ர ஸ்ரீ நிவாசர்,

5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

ஓம் நமோ நாராயணா..🛕

Monday, April 8, 2024

*நவகிரகங்களின் சிறப்பு ..!!!*

*நவகிரகங்களின் சிறப்பு ..!!!*
*****************************




*1.#சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.#சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்.

*3 . #அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.

*4.#புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.

*5.#குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

*6.#சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.#சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.

*8.#ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.

*9.#கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்.




*ஓம் நம சிவய நம ஓம்.✍🏼🌹*

Friday, February 9, 2024

ஒன்பதின்_தத்துவம்

#ஒன்பதின்_தத்துவம், 
#என்ன_என்பதைத் 
#தெரிந்து_கொள்ளுங்கள்



பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 
நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

#நவ_சக்திகள்:

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்:

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்:

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள்:-
நவரத்தினங்கள்:

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது):

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் 
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்) 

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

#அடியார்களின்_நவகுணங்கள்:

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

#நவ_நிதிகள்:

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

#நவ_குண்டங்கள்: 

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம், முக்கோணம்

#பிரதான_விருத்தம். 

1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

#நவ_பிரம்மாக்கள் : 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

#நவக்கிரக_தலங்கள் - 

1,சூரியனார் கோயிவில், 
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 
9,கீழ்ப்பெரும்பள்ளம்

#நவபாஷாணம் - 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம், 
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

#நவதுர்க்கா - 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

#நவ_சக்கரங்கள் - 

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

#நவநாதர்கள் - 

1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

#உடலின்_நவ_துவாரங்கள் : 

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

#உடலின்_ஒன்பது_சக்கரங்கள் : 

1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை 
108 முறை ஜபிக்க வேண்டும். 
எல்லா தெய்வத்தின் 
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும் 
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!

ஓம் சிவாய நமஹ...✍🏼🌹

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...