Saturday, May 4, 2019

*அறிவு என்றால் என்ன?**ஞானம் என்றால் என்ன?*

இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

அறிவு..ஞானம்.. என்றால் என்ன🤔🤔..?

            பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார்.

            புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது:

                   பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

                   அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது.

"    #அறிவு என்றால் என்ன?#ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர்.

                அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.

               பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு  #ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

              அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

               முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் #மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா''# என்றார்.

              அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.

              #தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.,

              அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான்.

           ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட   #வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு#   ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

              மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

               எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?' என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின.

                  ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

               பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா" என்றார். #முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்ளரில் பால் குடித்தேன்.

              நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!'' என்றான். இரண்டாவது மாணவன்,    "எனக்கு தங்கத் தம்ளரில் பால் கிடைக்க வில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் #வெள்ளி# தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி'' என்றான்.

             மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், #மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் தம்ளரில்தான் பால் கிடைத்தது'' என்றான்.

             பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். "மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

             பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.

               பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.

            ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.

                பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்''

            "நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!''

           பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது...

🌹ஜெய் சுவாமி ஜீ🌹ஜெய் குரு தேவ்🌹

Wednesday, April 24, 2019

*Restriction mode*

*பெற்றோர்களின் கவனத்திற்கு*

இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager* போன்ற *Android*

அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு  போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக* *phone* ல் செய்ய வேண்டியது

*play store*  சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.

*அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.

*அடுத்ததாக  *Films* ஐ கிளிக் செய்து  *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  *பாதுகாப்பானதாக* இருக்கும். *

*அதேபோல் *YOU TUBE*  settings ல் *Restriction  mode* ஐ *on* செய்யவும்

( *சமூக நலன் கருதி உங்கள் நண்பன் இரா.கருணாகரன் காவல் உதவி ஆய்வாளர் திருச்சி மாநகர் )

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*Form 16*

*இனி மாதச் சம்பளதாரர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது*

மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் பிடித்தம் செய்வதற்கு ஆதாரமான ஃபார்ம் 16 படிவத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதில் ஊழியர்கள் தங்களின் வருமானம் முதல் வாடகை மற்றம் அனைத்து வரவு செலவுகளையும் கண்டிப்பாக அதில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.TDS பிடித்தத்திற்கான புதிய படிவம் ஃபார்ம்(Form 16) வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட புதிய படிவத்தை அடிப்படையாகக் கொண்டே மாதச் சம்பளம் வாங்குவோர் தங்களின் 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

*மாத சம்பளதாரர்கள்*

தனி நபர், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் வருமான வரி ரிட்டன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டு தோறும் மேம்படுத்தி மாற்றிக் கொண்டே வருவது வாடிக்கை. அதே போல் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிடடன்களையும் இந்த மாத தொடக்கத்தில் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டது.

*ஃபார்ம் 16*

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் வருமான வரித்துறை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாலும், வருமான வரிக்கழிவுக்கான (Tax Deduction at Source) ஃபார்ம் 16 படிவத்தில் இது வரையிலும் எந்த மாற்றமும் செய்யாமலேயே இருந்து வந்தது.

*வருமான வரி பிடித்தம்*

ஃபார்ம் 16 (Form 16) என்பது ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, அதாவது வருமான வரி உச்சவரம்புக்கு மேற்பட்டு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் ( (TDS) செய்ததற்காக ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் வழங்கும் அத்தாட்சி சான்றிதழாகும்.

*TDS பிடித்தம் எப்படி*

பிரதி மாதமும் பிடித்தம் செய்த வருமான வரியானது (TDS) உரிய முறையில் தங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை இதை வைத்துத்தான் வருமான வரி செலுத்தும் அனைவரும அறிந்துகொள்ளமுடியும். சில நிறுவனங்கள் பிரதி மாதமும் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை காலம் தாழ்த்தியும் வருமான வரித்துறைக்கு செலுத்துவதும் வாடிக்கை.

*வருமான வரி ரிட்டனை தாக்கல்*

தற்போது வருமான வரித்துறை ஃபார்ம் 16 படிவத்தையும் முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது. இந்த படிவமானது வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் அனைரும் புதிய ஃபார்ம் 16 படிவத்தை அடிப்படையாக வைத்துத்தான் தங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியும் என்று வருமானத் துறை அறிவித்துள்ளது.

*புதிய படிவத்தில் என்ன இருக்கு*

மாற்றியமைக்கப்பட்ட புதிய ஃபார்ம் 16 படிவத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். வருமான வரி செலுத்துபவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் (Savings Accounts) டெபாசிட் செய்துள்ள பணத்திற்கான வட்டி, தள்ளுபடி மற்றும் கட்டணம் ஏதும் இருந்தாலும் அந்த விவரத்தையும் புதிய ஃபார்ம் 16 படிவத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

*நிரந்தர கணக்கு எண்*

ஃபார்ம் 16 படிவத்தோடு தொடர்புடைய மற்றொரு படிவமான ஃபார்ம் 24க்யூ (Form 24Q) படிவம். இதில் தான் யாருக்கெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, அவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். இந்த படிவத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் வருமான வரித்துறைக்க தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும்.

*கடன் மற்றும் வீட்டுக்கடன்*

தற்போது ஃபார்ம் 24க்யூ (24Q) விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் பான் எண்ணுடன், அவர்கள் யார் யாரிடம் இருந்து மற்றும் எந்த நிறுவனம் அல்லது நிறுவனம் அல்லாத நபர்களிடம் (Non Institutional Entities) இருந்து கடன் மற்றும் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் அவர்களின் பான் எண் விவரத்தையும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

*நிரந்தர கழிவு*

ஃபார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கிய நாங்கியா அட்வைசர் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சோலி மகேஸ்வரி, தற்போது வருமான வரிக்கழிவுக்கான ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 24க்யூ வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் வருமான வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி ரிட்டனில் அனைத்து விவரங்களையும் விரிவாக தெரிவிக்க முடியும். குறிப்பாக வருமான வரி பிரிவு 10ன் கீழ் வரும் நிரந்தர கழிவு (standard deduction) மற்றும் வருமான வரி விலக்குக்கான அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிவிக்க முடியும்.

*ஓடி ஒளிய முடியாது*

வருமான வரி செலுத்துவோர் முன்னர் இருந்த படிவங்களில் வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைக்கான விவரங்களை பிரிவு 80C, 80CCD, 80E மற்றும் 80G பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் போலியாக தெரிவித்து வரிச்சலுகையும் வரி விலக்கும் பெற்று வந்தனர். தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள `பார்ம் 16 மற்றும் 24க்யூ படிவங்களில் போலியான தகவல்களை எல்லாம் தெரிவிக்க முடியாது. அப்படியே போலியாக தெரிவித்து இருந்தாலும் வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து கண்காணிக்கவும் முடியும். இது வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய சிக்கலாகும்.

Wednesday, March 20, 2019

*கர்ணன்_கிருஷ்ணர்*

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

படித்ததில் பிடித்தது!

Thursday, February 14, 2019

*எண்ணம் போல வாழ்வு!*

உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித
மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம்

சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது.இறுக்கமான மனிதர்களாகவும்,இயந்திர கதியான
மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும்,சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ,இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல்தனியொரு உலகில் சிந்தனைகளோடே பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.இதற்கெல்லாம் அடிப்படை யாதென்று சிந்தித்தால் அவரவர்க்கான தனிப்பட்டஎண்ணங்களே ஆகும்.எண்ண
ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்
களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

கண்ணதாசன் சொன்னது : பூமியில் இருப்பதும், வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!'இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிதுபோய் வரும் உயரமும் புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே...' இப்படி கண்ணதாசன் எண்ணங்களின் மேன்மை பற்றி அழகுற சொல்லி இருக்கிறார்.
நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது.கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு.'வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம்' என்று.
பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன்
மேதாவித் தனத்தைக் காட்டும் மனிதர்கள் மற்றோர் வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே! எண்ணிய முடிதல் வேண்டுமென ஆசைப் பட்ட பாரதியே அடுத்த வரியாக நினைவு நல்லது வேண்டும் என்கிறார். நினைவுகள் நல்லதாக இருப்பின் நெருங்கிய பொருள் கைப்படுவது பாரதியின் பார்வையில் சாத்தியமே.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று மகிழ்ந்து பாடிய பாரதி வறுமையில் இருந்த கவிஞன் தான். இவ்வாறு எண்ணியவன் நிரந்தரமாக உறங்கி விட்டான்.அவன் விதைத்த எண்ணங்கள் இன்றும் உறங்கவில்லை. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்றும்,கல்வியால் பாரினை உயர்த்திட வேண்டும் என எண்ணிய பாரதியின் எண்ணங்கள் பிறர் நலன் சார்ந்தது. பிறர் நலன் நோக்கிய பாரதி தன் எண்ணங்களாலேயே இன்றும் நம்மிடையே வாழ்கிறார்

எண்ணிய எண்ணியாங்கு : எண்ணங்களே செயலைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கை
யாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. உள்ளத்தனையது உயர்வாக வேண்டுமெனில் உயர்ந்த எண்ணங் களை எண்ண வேண்டும். பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் 'பூ வேண்டாம்' என்று சொல்வதை விரும்ப மாட்டார். 'நாளை வாங்கி கொள்கிறேன்' என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறைஎண்ணம்.என்னால் முடியாது என்று
எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது.பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. இத்தகைய எதிர் மறையாளர்களிடம் பழகும் போது, நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் புகுந்து விடுகிறது. இது தான் எண்ணங்களின் வலிமை. உன் நண்பன் யாரென்று சொல்! நீ யாரென்று சொல்கிறேன் என்ற பழமொழியின் பின் புலம் இது தான். சிறு வயதில் நாம்
அனைவருமே கேட்ட விஷயம் ஒன்றை இங்கே நினைவு கூறலாம்.நம்மைச் சுற்றி கண்ணுக்குத்தெரியாத தேவதைகள் இருக்கின்றனவாம். அந்த தேவதைகள் நாம் என்ன கூறுகிறோமோ அதற்குஅப்படியே ஆகட்டும் என்று திரும்ப கூறுமாம். ஆகவே தான் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு. விக்கலிற்கான அறிவியல் பூர்வ காரணங்கள்கூறப்பட்ட போதிலும், யாரோ நினைக்காங்க போல... என்று
கூறுவதும் எண்ணங்களே.

எண்ண அலைகள் : வோரா எனப்படும் அதிர்வலைகள் நம்மைச் சுற்றி நிறைந்து இருப்பதாகவும், அத்தகைய அலைகள் நேர்மறை மனிதர்கள் இருக்கும் இடங்களில் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நல்லா இருக்கீங்களா...என்ற கேள்வியின் எதிர் வினை பதிலை வைத்து
மனிதர்களை இனங் காணலாம். நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை
எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் என்ற பதிலை உடையவர்கள் எதிர் மறை எண்ணங்களை கொண்டவர் களாகவும் அறிந்து கொள்ளலாம்.
துஷ்டனைக் கண்டால் துார விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்த
வனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதரண சக்தி பெறுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. ஆரோக்கியமான உடலும் உற்சாக குணமும் நிறைந்த ஒருவன் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறான்.அப்போது அவனுக்கே தெரியாமல் முன்பே பேசி வைத்து கொண்ட அவனின் நண்பர்கள் அவனை சந்திக்கின்றனர். ஒரு நண்பன் அவன் அருகில் வந்து என்னடா ஒரு மாதிரி இருக்கே என்று கேட் கிறான். இது போலவே மற்றொரு நண்பனும் உடம்பு சரியில்லையா, டல்லா இருக்கிற என்கிறான். இவ்வாறு வழி நெடுக பார்க்கும் நண்பர்கள் எல்லாம் கேட்கும் எதிர் மறை கேள்விகளால் சிக்குண்ட அவன் ஒரு கட்டத்தில் அதை உண்மையாகவே எண்ணத் தொடங்கி நோய் வாய்ப்பாட்டு படுத்து விடுகிறான். இப்படியான மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். அத்தகைய குணம் கொண்ட மனிதர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். மனதின் எண்ணங்
களைப் பலவீனமடையச் செய்யும் சக்திகளின் வலைகளை அறுத்தெறிய வேண்டும். அரசவையில் விகட கவிகளின் மூலம் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்ட அரசர்கள் போல நம் வாழ்வின் மனக் கவலையை மாற்றலாக்கும் மனிதர்களையே நட்புக் கரத்திற்குள் வைத்துக் கொள்வோம். அவர்களே வழியும், ஒளியுமானவர்கள்.

நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் துாங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்னை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த
எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என்
வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். நம்மைத் தவிர நம்மை யாரும் பிரசவித்துக் கொள்ள முடியாது. எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை..இது போன்ற வார்த்தைகள்
எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர் பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காகவர வேண்டும். அகத்தில் தேவையற்ற குப்பைகளைத் தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத் தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்கு
களைப் பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள். எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்து அதை இயக்கும் இயக்குநராக மனதைப் பழக்கப்படுத்தும் போது அது வழக்கமாகவே மாறி விடும்.

எண்ணங்களை வலிமையாக்க : எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா... என்னும் பாரதியின் நேர் மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாகக் கடந்து விடும்பக்குவமும் வந்து விட்டாலே
வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நோய்க் கிருமிகளை பரப்பும் ஏடிஸ் கொசுக்களாக இல்லாமல் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களாக வாழ்வோம்.நினைத்தது எல்லாம் நடக்கணும் என்று எண்ணிப் படுத்த திருடன் முதலில் கட்டில், பின்பு தலையணை என ஒவ்வொன்றாக கேட்க அனைத்தும் கிடைக்கவும், நல்ல உறக்கம் வர நினைப்பவன், உறங்கும் நேரம் புலி வந்து கொன்று விட்டால் என நினைக்க இறுதியில் புலி அவனைக் கொன்றதாக அந்தக் கதை
முடியும். நம் எண்ணங்கள் எத்தகையதாக அமைய வேண்டும் என்பதை இந்தக் கதை
உணர்த்துகிறது அல்லவா? எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்
எண்ணமது திண்ணமானால் வாழ்க்கையது வண்ணமாகும்.எண்ணங்களை வசமாக்கி
வாழ்வாங்கு வாழ்வோம்.

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...