Thursday, December 22, 2022

*‘கணிதமேதை’ இராமானுஜர் பிறந்த தினம் இன்று*

_*‘கணிதமேதை’ இராமானுஜர் பிறந்த தினம் இன்று*_ 



 *‘கணிதமேதை’ இராமானுஜன் பிறப்பு* 
 
‘கணிதமேதை’ இராமானுஜன் வறுமையே சொத்தாயிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இராமானுஜன். 

தந்தை பெயர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார். தாய் கோமளம். பிறந்தது ஈரோட்டில் தாய்வழிப் பாட்டி வீட்டில் (1887 டிசம்பர் 22) என்றாலும் ஒரு வயதிலிருந்தே வளர்ந்து வாழத் தொடங்கியது சொந்த ஊரான கும்பகோணத்தில் தான்.

இராமானுஜன் படிப்பில் படுசுட்டி. அபார நினைவாற்றல் உடையவர். 

படிக்கிற காலத்தில் ஒரு புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்து விடுவார். 


ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது பள்ளியில் மட்டுமல்ல ஊரிலேயே முதல் மாணவன் அவர்தான்.

கணக்கில் புலி. அப்பாவுக்கு துணிக்கடையில் கணக்குப் பிள்ளை உத்யோகம். மாத சம்பளம் இருபது ரூபாய். 

அந்தச் சொற்ப ஊதியத்தில்தான் குடும்பம் தன்னுடைய சாப் பாடு, துணிமணி மற்றும் வீட்டுச் செலவுகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை. 

இராமானுஜத்துக்குப் பசி பழகி விட்டிருந்தது. 

 *‘கணிதமேதை’ இராமானுஜன் கணக்கில் புலி* 

பசியில் வாடினாலும் உணவுக்குப் பதில் கணக்குதான் அவருடைய சிந்தனையில் இருந்தது. 

உறங்கினால் கனவிலும் கூட கணக்குத்தான் வந்தது அவருக்கு. தனிமை நாடி கோயிலுக்குச் செல்கிறவர் அங்கேயே களைத்துச் சோர்ந்து கிடப்பார்.

அவரைச் சுற்றிலும் கணக்குகள் போடப்பட்டிருக்கும். வீட்டில் எப்போது பார்த்தாலும் சிலேட்டில் கணக்கு செய்து கொண்டிருப்பது அவருடைய பழக்கம். அந்தப் பழக்கம் வாழ்க்கை நெடுகிலும் இருந்தது.


கும்பகோணத்தில் அவருடைய வீட்டில் சில மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் மூலம் வெளிநாட்டுக் கணிதமேதைகள் எழுதிய நூல்கள் அவருக்குப் படிக்கக் கிடைக்கும்.

லோனி என்பவர் எழுதிய ‘கோணம்’ என்ற கடினமான நூல் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. அவற்றிலுள்ள கணக்குகளுக்கு எல்லாம் அவர் விடை கண்டுபிடித்திருக்கிறார். ‘கணிதச் சுருக்கம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த கணக்குகளுக்குப் பதிலாய் பல புதிய சூத்திரங்களை இராமானுஜன் உருவாக்கிக் காட்டினார்.

நண்பர்கள் அவருடைய திறமையை வியந்து பாராட்டினர். 

இராமானுஜன் கணித பாடத்தில் அதிக அக்கறை காட்டியதால் மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டுத் தேர்வில் (எஃப்.ஏ) தோற்றதால் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் போயிற்று. 

ஒருபக்கம் பசி பட்டினி, மறுபக்கம் உடற்பிணி. இரண்டுடனும் போராடிக் கொண்டுதான் அவர் தமது கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 

 *இராமானுஜன் திருமண வாழ்க்கை* 

அந்நிலையில் 1909 ஆம் ஆண்டு ஜானகி என்ற பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. 

அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. குடும்பம் நடத்துவதற்கான முதிர்ச்சி இல்லை, என்றாலும் பாரம் சுமந்தாக வேண்டுமே. 

 *இராமானுஜனின் வறுமை* 

வேலை தேடி சென்னை சென்றார் இராமானுஜன் அங்கே துறைமுகம் கழகத்தில் வேலை கிடைத்தது. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்துவதில் சிரமம்.

ஆனாலும், தம்முடைய நிலை குறித்து வருத்தமேதுமின்றி கணித ஆராய்ச்சியில் மனமொன்றி விடுவார் அவர். 

தம்முடைய ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிடுவார்.

அவ்விதமாய் அவருடைய பெயர் வெளிநாடுகளில் பரவத் தொடங்கியது. ஊக்குவிக்கும் மனிதர்களும், பண வசதியும் இருந்திருந்தால் அவர் எப்போதோ உலகப்புகழ் பெற்றிருப்பார்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும் ஒற்றை ஆளாய் நின்று முயற்சிகள் மேற்கொண்டார். 

இராமானுஜனின் திறமையை முதலில் அடையாளம் கண்டவர் கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) பல்லைக் கழகப் பேராசிரியர் ஜி.எச். ஹார்டி என்பவராவார்.

1914-ல் ஹார்டியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றார் இராமானுஜன். 

அவருக்கு 250 பவுண்ட் உதவித் தொகையுடன் ட்ரினிட்டி கல்லூரியில் படிப்பு, ஆராய்ச்சி தொடர அவரே ஏற்பாடு செய்தார்.

அத்துடன் இந்தியாவில் இருந்த இராமானுஜனின் மனைவிக்கு 10 பவுண்ட் அனுப்பி தரவும் வகை செய்தார் அவர். 

1912-ல் தாம் எழுதி வைத்திருந்த கணிதக் குறிப்பு களை ஹார்டியிடம் காணபித்தார் இராமானுஜன்.

1894-ல் ரோஜர் என்ற கணிதமேதை வெளியிட்டிருந்த கணிதக் குறிப்புகளைவிட அவை சிறப்பா இருந்ததைக் கண்டார் ஹார்டி. 

இராமானுஜனின் கணிதத் திறன் இங்கிலாந்திலுள்ள கணிதப் பேராசிரியர்களை வியப்படையச் செய்தது. 

 *இராமானுஜனின் கணித ஆராய்ச்சிகள்* 

 ஹார்டியுடன் இணைந்து கணிதத்தில் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். 

1918-ல் லண்டன் “ராயல் சொஸைட்டி’ இராமானுஜத்தைத் தங்கள் கழகத்தில் உறுப்பினராக்கி கொண்டது.

எஃப்.ஆர்.எஸ் (Fellow of Royal Society) விருது வழங்கிக் கவுரவித்தது. லண்டன் சீதோஷ்ண நிலை அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

 *இராமானுஜனின் மரணம்* 

உடல்நிலை கடுமையாய் பாதிக்கப் பட்டது. ஹார்டி உள்ளிட்ட பேராசிரியர்கள் அவரைக் குணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஒரு  
பலனளித்தது. இராமானுஜன் இந்தியா திரும்பினார்.

இங்கே அவர் நீண்ட காலம் வாழவில்லை. ஆயினும், மருத்துவ சிகிச்சை பெற்ற நாட்களிலும் கூட தம்முடைய கணித ஆராய்ச்சியை அவர் தொடர்ந்திருக்கிறார். இருந்தென்ன, 1920 ஏப்ரல் 26-ஆம் நாள் காலம் அவரைக் கைவிட்டு விட்டது.

இறுதி மூச்சு நிற்கிற கணத்திலும் கையில் கணித நோட்டுடனும், பேனாவுடனும் இருந்தார் அவர். 33 வயது என்பது கொஞ்சந்தான். ஆனால், அந்த வயதிற்குள் வேறெந்த அறிவியல் மேதையும் பெற்றிருக்க முடியாத பெரும் புகழை இராமானுஜன் பெற்றுவிட்டார்.


🌷🌷

*🌺ரத்தத்தில்_சர்க்கரை* # *குறைவது_ஏன்……*

*🌺ரத்தத்தில்_சர்க்கரை* 
# *குறைவது_ஏன்……* 

 *#என்ன_காரணம்…* 



இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. 

இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது……

👉தாழ் (குறை) சர்க்கரை மயக்கம் 
( Hypoglycaemic Coma )

 *ரத்தத்தில் சர்க்கரை குறைவது ஏன்* 
 *என்ன காரணம்…* 

இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள 
டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒரு முறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.
ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள்…… 

⏩உணவுக் கட்டுப்பாடு, 

⏩மாத்திரை, 

⏩இன்சுலின் ஊசி 

ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.

 *எது* *தாழ்(குறை)சர்க்கரை* 

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். 

ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. 

ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். 

சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். 

இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.

 *எப்படி வருகிறது* 

சாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 

5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். 

வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.

ஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். 

👉இதன் விளைவாக…… 

♦மூளை செல்கள், 

♦மூளை நரம்புகள் 

⭐குறிப்பாக…… தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். 

மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற 
#குளுக்ககான்_ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.

 *அறிகுறிகள்_என்ன* 

 *ஆரம்ப அறிகுறிகள்* 

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

👉உடல் அதிகமாக வியர்ப்பது.

👉உடல் குளிர்ச்சியாக இருப்பது.

👉உடல் தளர்ச்சி.

👉படபடப்பு.

👉உடல் நடுக்கம்.

👉அதிகப் பசி.

👉தலைவலி.

👉தலைசுற்றல்.

👉பார்வை குறைவது.

👉இதயத் துடிப்பு அதிகரிப்பது.

 *அடுத்த_கட்ட_அறிகுறி……* 

> ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.…

l பேச்சு குழறுதல்.

l மனக் குழப்பம்.

l அரை மயக்கம் (Semiconsciousness).

 *இறுதி கட்ட* *அறிகுறிகள்* 

l வலிப்பு வருவது.

l முழு மயக்கம் (Unconsciousness).

l 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.

 *முழு மயக்கம்* *ஏற்பட்டால்* 

முழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.

♦டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.

 *எச்சரிக்கையாக* *இருக்க* *வேண்டியவர்கள்* 

வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.

 *குழந்தைக்கு ரத்தச்* *சர்க்கரை* *குறைந்தால்* 

டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். 

*குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை*
*குறைய ஆரம்பித்துவிட்டால்*

👉குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும்.…>>👇 

> அதிகம் பசிக்கும், 
வியர்க்கும், 

> படபடப்பு வரும், 

> நாக்கு உலரும், 

> உடல் நடுங்கும், 

> பார்வை குறையும். 

> குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும் 

> குழப்பமான மனநிலையில் இருக்கும். 

> இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்

> மயக்கம் வரும் சில வேளைகளில் வலிப்பு வரலாம்.

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.

 *தடுப்பது எப்படி* 

l நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.

l இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.

l டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.

l இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

l இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.

l அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.

 *தாழ்சர்க்கரை ஏன் ஏற்படுகிறது* 

l தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.

l இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.

l தாமதமாகச் சாப்பிடுவது.

l விரதம் இருப்பது.

l நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.

l அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.

l கடுமையாக உடற்பயிற்சி செய்வது.

l வெறும் வயிற்றில் மது அருந்துவது.

 *யாருக்கு வருகிறது* 

கீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.

l டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.

l சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.

l முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)

l மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.

l கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.

 *இவர்கள் என்ன* *செய்ய வேண்டும்* 

❔கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்❔

l ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

l தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

l இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

l 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

l குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

l தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.

l வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.

l குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

l தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

l படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.

 *என்ன_முதலுதவி* 

தாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி……?

l குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து 
‘தாழ் (குறை) சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.

l குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.

l மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

l கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.

l இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

l முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.






🪷🪷🪷

Saturday, December 17, 2022

தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!

தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!





அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும்  அந்த அனுபவமும் கூட இருக்கும்..!
அது ஏன்?

உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!

மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.

ஒன்று விரைவான கண் அயர்  இயக்கம்
(RAPID EYE MOVEMENT @REM)

மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM @NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.

அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே  மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.

ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.

அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள்  உடல் இன்னும்  தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.!

REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம்  உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...
உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.

மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது (இரண்டாவது படம் பார்க்க).

அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க  ட்ரைப்  பண்றேன்  ஆனா என்னால முடியலயே  பேய்  வந்து அமுக்குது போல" என்று.!
சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து  கொண்டிருக்கும்  கணவும்  பேய் நினைப்புக்கு சென்று  ஒரு பேயையும்  கணவில் கொண்டு வந்து காட்டும்..!

SLEEP PARALYSIS -  என்பதுதான்  உங்களை வந்து  அமுக்கிய பேய்.!
உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.!
உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழ்கிறது... அதனால் பயப்பட ஏதும்  தேவை இல்லை..!!!

பிடிச்சா லைக் பண்ணுங்க..!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க..!

சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்க.!

#உறங்கும்போது #பேய் #அமுக்குகிறதா #மருத்துவ_மகிமை...

ஆரோக்கிய தினம்

*அனைவருக்கும் ஆரோக்கிய தின வாழ்த்துக்கள்*
🄷🄰🄿🄿🅈 🄸🄽🅃🄴🅁🄽🄰🅃🄸🄾🄽🄰🄻
🄷🄴🄰🄻🅃🄷   🄳🄰🅈
மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
1. பிபி: 120/80
2. துடிப்பு: 70 - 100
3. வெப்பநிலை: 36.8 - 37
4. மூச்சு: 12-16
5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18
பெண் - 11.50 - 16
6. கொலஸ்ட்ரால்: 130 - 200
7. பொட்டாசியம்: 3.50 - 5
8. சோடியம்: 135 - 145
9. ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40%
11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115
12. இரும்பு: 8-15 மி.கி
13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000
14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000
15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன்.
16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL
17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml.
18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி.

*ஆரோக்ய தின வாழ்த்துக்கள்*

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...