முதன் முதலில் மகளிருக்கு மகப்பேறு விடுப்பு தந்தவர் யார் ?.
மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 6, 9 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது.
அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து பதவி விலகி விட வேண்டும்.
அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம். மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .
மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப் படுவார்கள். அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்காது .
1942ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனிதாபிமானத்தோடு இப் பிரச்சினையை அணுகினார்.
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை அறிவித்தார். பெண்மையின் அறிவையும் நலத்தையும் ஒருசேர பாதுகாத்தார். சுதந்திர இந்தியாவிலும் அது இன்று வரை தொடர்கிறது .
*அந்த தொழிலாளர்* *நலத்துறை அமைச்சர்*
*டாக்டர் அம்பேத்கர்* .
No comments:
Post a Comment