.............................................
கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரம் ஏதென்ஸ் என்றவுடனே நம் நினைவுக்கு வருபவர் தத்துவ மேதை சாக்ரடீஸ் ..
சாக்ரடீஸ் ஒருமுறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.
நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தார்...
மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய
வண்ணம் நடந்து சென்று விட்டார்.
இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.
ஏழாம் நாள் -சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்.,
"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன்.கடைத்தெரு வழியே வருகிறீர்கள் ,கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்,
ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ்,-
அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே .,இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!
இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", எனக் கூறினாராம்.
கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!
ஆம்.,தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால் மற்றவரை நாம் பணக்காரர் ஆக்குகிறோம்;
நாம் அதனால் ஏழையாகிறோம்.தேவைப்படும்போது அதை வாங்க முடியாமல் கவலைப்படுகிறோம்!
கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள்.
அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது.சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
ஆம்..!நண்பர்களே.,
தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பும்,
சிக்கனமும் எந்த அளவு முக்கியமோ,
அதே அளவிற்கு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அது பயன்படுகிறது.
* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு
ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.
சிக்கனமான வாழ்க்கைதான் சீரான வாழ்க்கை’என்பது நம் முன்னோர் சொல்..,
தெ.இரவிச்சந்திரன்🙏
No comments:
Post a Comment