பாராத பயிரும் கெடும்..🎯
பாசத்தினால் பிள்ளை கெடும்..🎯
கேளாத கடனும் கெடும்..🎯
கேட்கும்போது உறவு கெடும்..🎯
தேடாத செல்வம் கெடும்..🎯
தெகிட்டினால் விருந்து கெடும்..🎯
*அது மட்டுமா* ?
👌👌👌👌👌
ஓதாத கல்வி கெடும்..🥁
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்..🥁
சேராத உறவும் கெடும்..🥁
சிற்றின்பத்தால் பெயரும் கெடும்..🥁
நாடாத நட்பும் கெடும்..🥁
நயமில்லா சொல்லும் கெடும்..🥁
கண்டிக்காத பிள்ளை கெடும்..🎯
கடன்பட்டால் வாழ்வு கெடும்..🎯
பலனற்ற பிரிவால் இன்பம் கெடும்..🎯
அளவற்ற பணத்தால் அமைதி கெடும்..🎯
சினமிகுந்தால் அறமும் கெடும்..🎯
சிந்திக்காத செயலும் கெடும்..🎯
சோம்பினால் வளர்ச்சி கெடும்..🎯
சுயமில்லா வேலை கெடும்..🎯
மோகித்தால் முறைமை கெடும்..🥁
முறையற்ற உறவும் கெடும்..🥁
அச்சத்தால் வீரம் கெடும்..🥁
அறியாமையால் முடிவு கெடும்..🥁
*அதோடு* ..
👌👌👌👌
உழுவாத நிலமும் கெடும்..🎯
உழைக்காத உடலும் கெடும்..🎯
இறைக்காத கிணறும் கெடும்..🎯
இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்..🥁
இல்லாலில்லா வம்சம் கெடும்..🥁
இரக்கமில்லா மனம் கெடும்..🎯
தோகையினால் துறவு கெடும்..🎯
துணையில்லா வாழ்வு கெடும்..🎯
ஓய்வில்லா முதுமை கெடும்..🥁
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்..🥁
அளவில்லா ஆசை கெடும்..🎯
அச்சப்படும் கோழை கெடும்..🎯
இலக்கில்லா பயணம் கெடும்..🥁
இச்சையினால் உள்ளம் கெடும்..🎯
உண்மையில்லா காதல் கெடும்..🎯
உணர்வில்லாத இனமும் கெடும்..🥁
செல்வம்போனால் சிறப்பு கெடும்..🥁
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்..🎯
*அப்படியே* ..
👌👌👌👌
தூண்டாத திரியும் கெடும்..🎯
தூற்றிப்பேசும் உரையும் கெடும்..🎯
காய்க்காத மரமும் கெடும்..🎯
காடழிந்தால் மழையும் கெடும்..🥁
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்..🎯
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்..🎯
வசிக்காத வீடும் கெடும்..🥁
வறுமை வந்தால் எல்லாம் கெடும்..🎯
குளிக்காத மேனி கெடும்..🤭
குளிர்ந்து போனால் உணவு கெடும்..🤭
பொய்யான அழகும் கெடும்..🤭
பொய்யுரைத்தால் புகழும் கெடும்..🤭
துடிப்பில்லா இளமை கெடும்..👌
துவண்டிட்டால் வெற்றி கெடும்..👌
தூங்காத இரவு கெடும்..🥁
தூங்கினால் பகலும் கெடும்..👌
கவனமில்லா செயலும் கெடும்..🎯
கருத்தில்லா எழுத்தும் கெடும்..✍
No comments:
Post a Comment